dimanche 24 février 2008

உயிர் வாழ ஓர் தேசம்

உறவுகளுக்காக ஓர் தேசம்,
உணர்வுகளுக்காக ஓர் தேசம்,
உணர்ச்சிகளுக்காக ஓர் தேசம்,
உயிர் வாழ ஓர் தேசம்,
என் மனதில் மட்டும்,
எல்லாத் தேசமும் தூரதேசம்!

நம் தேசக் காற்று

நம் தேசக் காற்று பட்டதும்
விழியால் இணைந்தோம், பின்
மொழியால் கலந்தோம், ஆனால்
இன்று வேறு வழியின்றி, வாழுகின்றோம்
தூரதேசமொன்றில்.